கூடலூர் அருகே யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம் கூடலூர், ஓவேலியை அடுத்த நியூஹோப் என்ற இடத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-15 04:48 GMT

பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர், ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூஹோப் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் 25, கூலித் தொழிலாளி. இவர் நேற்றிரவு தனது வீட்டிற்கு செல்லும் வழியில், பெரிய சூண்டி பஜார் கூட்டுறவு பால் பண்ணை அருகே வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காட்டு யானை பிரசாத்தை தாக்கியது. காட்டு யானை தாக்கியதில் பிரசாத் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் வரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.