திருப்பத்தூரில் குடும்ப தகராறு: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
திருப்பத்தூரில் குடும்ப தகராறுகாரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-14 14:12 GMT
கோப்பு படம்
திருப்பத்தூர் அடுத்த உடையாமுத்தூர்,குரும்பர் தெரு பகுதியை சேர்ந்த குடியனின் மகன் மாது(35). கூலி தொழிலாளி.இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில்,வழக்கம் போல் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து மாது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் அங்கு சென்று,சடலத்தை மீட்டு,பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.