மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

இளையான்குடி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-06 10:29 GMT

இளையான்குடி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் போலீசார் கைது செய்தனர்.  

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள வாணி கருப்புசாமி கோவில் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக இளையான்குடி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அப்பகுதியில் இளையான்குடி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீவ் மற்றும் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாணி பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 30) என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் அவரிடம் இருந்து டிராக்டர் மற்றும் அரை யூனிட் மணல் ஆகியவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

Similar News