சிவகாசியில் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2024-05-06 14:05 GMT
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகாவில் இணைந்த இளைஞர்கள் பட்டாளம்...

சிவகாசியில் முன்னாள் அமைச்சர்  கே.டி இராஜேந்திரபாலாஜி முன்னிலையில் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில்  இணைத்துக் கொண்டனர்... விருதுநகர் மாவட்டம், தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாற்று  கட்சியினர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமானோர் தொடர்ந்து  தங்களை முன்னாள் அமைச்சரும்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி முன்னிலையில் சிவகாசி  அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை  சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

பின்னர் கட்சியில்  இணைந்தவர்களுக்கு கே.டி.இராஜேந்திரபாலாஜி  சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து தீவிர களப்பணியாற்ற வேண்டும் எனவும்,தங்களுக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News