பைக் மோதி வாலிபர் பலி
இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;
Update: 2024-03-22 06:29 GMT
பலி
சின்னசேலம் அடுத்த அ.வாசுதேவனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மோனீஸ்வரன்,21; இவர், நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் பைக்கில், அம்மையகரத்தில் இருந்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக அ.வாசுதேவனுாருக்கு பைக்கில் சென்றார். அம்மையகரம் கிராம எல்லை அருகே, மோனீஸ்வரன் இயற்கை உபாதைக்கு சென்று விட்டு மீண்டும் பைக் எடுத்துள்ளார்,
அப்போது, அதே திசையில் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் மோனீஸ்வரனுக்கு படுகாயமடைந்தார். உடன் மோனீஸ்வரனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.