அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி

சிவகாசி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-03 02:15 GMT

விபத்தில் பலி

விருதுநகர், ஆணைக் குட்டம் பகுதியைச் சார்ந்தவர் காட்டு ராஜா வயது 42. இவருடைய மனைவி கற்பகவல்லி. காட்டு ராஜா முட்டை வியாபாரம் செய்து வருவதாகவும் தனது டூ வீலர் வாகனத்தில் சென்று கிராமங்களுக்கும் கடைகளுக்கும் முட்டை வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி மாலையில் இருசக்கர வாகனத்தில் வசூல் வேலைக்காக சென்றவர் இரவு 9 மணி 30 நிமிடம் அளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வசூல் முடித்துவிட்டு வருவதாக கூறியுள்ளார்.

தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகர் சிவகாசி சாலையில் காளீஸ்வரி கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது அதே சாலையில் அவருக்கு எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகன மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தார் காட்டு ராஜாவை அருகில் இருப்பவர்கள் மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பணியில் இருந்தவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து தகவல் தெரிந்து அங்கு சென்ற காட்டு ராஜாவின் மனைவி கற்பகவல்லி கணவரின் உடலை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.

Tags:    

Similar News