டிப்பர் லாரி மோதி இளைஞர் பலி
By : King 24X7 News (B)
Update: 2023-10-29 13:44 GMT
விபத்தில் பலியான இளைஞர்
ஆனைமலை பகுதியில் வசித்து வந்தவர் இருதயராஜ் (31). இவரது மனைவி கோமதி(28). இருதயராஜ் கென்சங்கம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருதயராஜ் பலியானார்.இதுகுறித்து கோமதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள கோட்டூர் போலீசார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த செல்லதுரை (48) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.