வாலிபர் தற்கொலை

அதியமான் கோட்டையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2024-03-05 12:52 GMT

  கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, மூலிமங்கலம் அருகே அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் முத்துக்குமார் வயது 42. இவரது மனைவி கஸ்தூரி வயது 32. முத்துக்குமாருக்கு கடந்த ஒரு வருட காலமாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு வயிற்று வலி நிற்கவில்லை. இதனால், விரக்தி அடைந்த மன நிலையில் வாழ்ந்து வந்தார் முத்துக்குமார்.

Advertisement

இந்நிலையில், மார்ச் 3-ம் தேதி காலை 6:30- மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் முத்துக்குமார். இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து, இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த முத்துக்குமாரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News