தொழில் நஷ்டத்தால் வாலிபர் தற்கொலை
செட்டிகரை அருகே தொழில் நஷ்டத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-20 02:49 GMT
தற்கொலை
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிக்கரை பகுதியைச் சேர்ந்த வர் பெரியண்ணன் மகன் கோகுல் இவர், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த கோகுல் கடந்த 17ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த னர், அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி கோகுல் நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.