இளைஞர் தற்கொலை - போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-07-03 02:55 GMT

பைல் படம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி நகர் 4வது வீதியில் வசிப்பவர் சூர்யா, 28. சிப்ஸ் வியாபாரம். இவர் கேரளாவை சேர்ந்த காவியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், சூர்யாவிற்கு குடிப்பழக்கம் உள்ளதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, காவியா தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 04:30மணியளவில், தன் வீட்டில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு, அனைவரும் சென்ற பின், வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டி இறந்தார். இது குறித்து இவரது தந்தை மாரியப்பன், 61, போலீசில் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News