இளைஞன் மர்ம மரணம் - மனைவி போலீசில் புகார் !

ராமநாதபுரம் சுமை தாங்கி அருகே இளைஞன் காயங்களுடன் மர்ம மரணம் அடைந்த நிலையில் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-03-18 05:40 GMT

 மரணம்

ராமநாதபுரம் திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள சுமைதாங்கி. இந்த ஊரை சேர்ந்தவர் பாலமுருகன் மைக் செட் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நேற்று அதிகாலை அவரின் வயல்வெளிக்கு அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரின் மனைவி வனஜா தனது கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்படி திருஉத்தரகோசமங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News