தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையத்தில் ஐ.ஜி ஆய்வு

Update: 2024-09-03 09:58 GMT

திருத்தணி காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையம் நிலையம் 2023 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டி.ஜி.பி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.ஜி.பி சங்கர் ஜிவால் கேடயம் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.



இந்நிலையில் , சென்னை உள்ள காவல்துறை தலைவர் அலுவலகத்தின்

தலைமையிடத்து ஐ.ஜி ஆசியம்மாள்

திருத்தணி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்கள் ஆய்வுகள் கோப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்தார். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் போலீசார் அணிவகுப்பு மரியாதை வாங்கினார். இதனை தொடர்ந்து திருத்தணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பதிவேடுகள் மற்றும் குற்ற பின்னணி தொடர்பான ஆவணங்கள் வழக்கு விவரங்கள் தொடர்பாக முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தார். காவல் நிலையத்தில் சுற்றுப்புறத் தூய்மை பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News