கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணி ஆணை

Update: 2024-09-04 11:52 GMT

kalaignar kanavu illam scheme

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருத்தணி ஒன்றியத்தில் 73, பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட பணி ஆணைகளை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் 2024 -2024 ஆம் ஆண்டு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு 1- பயனாளிக்கு 3.5 லட்சம், மதிப்பீட்டில் 73 பயனாளிகளுக்கு, கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி

திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சாந்தி, சந்தானம் ஆகியவர்கள் முன்னிலை வகித்தனர்,

வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் கிரிராஜ் வரவேற்புரை ஆற்றினார்

சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டம் பணி ஆணைகளை சிறப்புரையாற்றி வழங்கினார் .

Tags:    

Similar News