தேசிய பெட்ரோல் தினத்தை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பில் சைக்கிள் பேரணி

Update: 2023-08-28 05:19 GMT

சைக்கிள் பேரணி 

நாமக்கல்லில் பசுமைத்தாயகம் சார்பில் தேசிய பெட்ரோல் தினத்தை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த சைக்கிள் பேரணி மூன்று பிரிவின் கீழ் நடைபெற்றது. 20 கிலோமீட்டர் 50 கிலோமீட்டர் 105 கிலோமீட்டர் பிரிவின் கீழ் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாமக்கல்லில் இருந்து புதன் சந்தை வரை சிறுவர்களும். பெரியவர்களுக்கு ஆண்டலூர் கேட் வரையிலும் மற்றும் சேலம் அயோத்தியபட்டினம் வரையிலும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகளும் பாராட்டுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது‌.

இந்த நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட தலைவர் தினேஷ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ். பசுமைத் தாயகம் குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ், மாணவர் சங்க மாநில செயலாளர் பாலு, சரவணன், பிரபு, காமராஜ்,மணி, ஜெய்கணேஷ், விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News