ஸ்ரீரங்கம் கோவில் யானைக்கு 45வது பிறந்தநாள்... கோவில் பணியாளர்கள், பக்தர்கள் உட்பட பலர் வாழ்த்து!!

ஸ்ரீரங்கம் கோவில் யானையின் 45வது பிறந்த நாளையொட்டி கோவில் பணியாளர்கள், பக்தர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2023-07-03 12:26 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சிறப்புக்குரியதும் ஆகும். இக்கோவிலில் கடந்த 1986ஆம் ஆண்டு முதல் ஆண்டாள் என்ற யானை, கோவில் திருப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று ஆண்டாள் யானைக்கு 45-வது பிறந்த நாளாகும்.

இதனையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டாள் பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ஆண்டாள் யானைக்கு பிடித்த தர்பூசணி, அண்ணாசி, சப்போட்டா உள்ளிட்ட பழங்களும், சாக்லேட்டுகளும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஆண்டாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளின் 45-வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாட்டம்!

Tags:    

Similar News