தி.மு.க சிறந்த ஒன்றிய திமுக செயலாளருக்கான விருது கே.பி.இராமசுவாமி விருது பெறுகிறார்

கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வாழ்த்து

Update: 2023-09-05 04:49 GMT

கே.பி.இராமசுவாமி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் கழகப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குசிறப்பு செய்யும் வகையில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா வரும் 17-09-2023 அன்று வேலூரில் நடைபெற உள்ளது. திமுக சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான விருதிற்கு நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.இராமசுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த முப்பெரும் விழாவில் சிறந்த ஒன்றிய திமுக செயலாளருக்கான விருதினை பெறும் நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.இராமசுவாமிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News