வித்யா விகாஸ் CBSE பள்ளியில், ஐம்பெரும் விழா

Update: 2023-08-31 11:13 GMT

ஐம்பெரும் விழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் CBSE பள்ளியில், பசுமை படை துவக்க விழா, வீட்டிற்கு ஒரு விருட்சம் திட்டத்தில் 600 மரக்கன்றுகள் வழங்கும் விழா, பள்ளி தாளாளர்களுடன் மரம் நடும் விழா,பசுமை தூதுவர்களை நியமிக்கும் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பசுமை படை மாணவர்களது பணிகள் பற்றிய கருத்தரங்கம், என்ற ஐம்பெரும் விழா நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற, பயிற்சியில் பள்ளி தாளாளர்கள் உயர்திரு எஸ் ராமலிங்கம் , Dr. T. O. சிங்காரவேல் மற்றும் பள்ளி முதல்வர் திருமதி ஜாகுரதி, பசுமை படை ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் சுமார் 250 நபர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

Tags:    

Similar News