மல்லசமுத்திரம் செயல் அலுவலர் பணி ஓய்வு

Update: 2023-09-01 05:46 GMT

 பணி ஓய்வு

மல்லசமுத்திரம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.

மல்லசமுத்திரம் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரவிக்குமார் நேற்று பணி ஓய்வு பெற்றார். பேரூராட்சித் தலைவர் திருமலை நினைவுப் பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துபேசினார்.

செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னதாக 34 வருட கடந்த கால அனுபவங்களையும், செயல்களையும் நினைவு கூர்ந்து பேசினார். மேலும் வாரிசு அடிப்படையில் 10-க் மேற்பட்ட நபர்களுக்கு முன்நின்று இவர்களுக்கு பேரூராட்சியில் கருணை அடிப்படையில் பணிகள் கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்தார். இவர்கள் அனைவரும் நேரில் வந்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதில், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் சுரேஷ், பழனிச்சாமி, சத்யா, முரளி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர்கள் தனபால், சரவணன்,

துப்புரவு மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, தூய்மை பணியாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர், மனோரஞ்சிதம்,வார்டு உறுப்பினர்கள் தங்கமணிகுமார்,

சரவணன், ரத்தினம், நளினி, சுந்தரி, முருகன், யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News