அமலாக்கத்துறை பற்றி கேட்டதும் கோபத்தில் எழுந்த அமைச்சர் பொன்முடி..!

``நாங்கள் சந்திக்காத சோதனையா... சட்ட ரீதியாக சந்திப்போம்"

Update: 2023-07-21 11:45 GMT

அமைச்சர் பொன்முடி 

தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, உயர் கல்வித்துறையில் எனது செயல்பாடுகளை முடக்க அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதா எனக் கேட்கிறீர்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ சொல்லிக்கொள்ளுங்கள். இது போன்ற சோதனைகளை எல்லாம் நாங்கள் பார்க்காதவர்கள் அல்ல. இது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினே சட்ட ரீதியாக இந்தச் சூழலை எதிர்கொள்வோம் என சொல்லிருக்கிறார். அதனால் எதையும் சட்ட ரீதியாக சந்திப்போம்" எனத் தெரிவித்து கோபத்தில் எழுந்து சென்றுள்ளார்.

Tags:    

Similar News