மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 68.77 லட்சம் நலத்திட்ட உதவிகள்

மாவட்ட ஆட்சியர் உமா வழங்கினார்

Update: 2023-08-07 12:08 GMT

நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.68.77 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 386 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாவிடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.83,500/- வீதம் ரூ.4,17,500/- மதிப்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு டிராக்டர் மற்றும் பயணியர் வாகனம் வாங்க ரூ.29,09,120/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் சார்பில் 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.33,00,000/- வங்கி கடன் இணைப்பிற்கான ஆணைகளையும், முதலமைச்சர் பொது நிவராண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000/- இலட்சம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.2,00,000/- மதிப்பில் நிவராண உதவித் தொகையினையும், ரூ.50,000/- மதிப்பில் 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணையும், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் என 17 பயனாளிகளுக்கு ரூ.68.77 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News