காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்” -ஆட்சியர் ச.உமா தகவல்
Update: 2023-09-19 10:20 GMT
ச.உமா தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் “காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் 21.09.2023 அன்று நண்பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.
பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.