செல்வமாரியம்மன் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

Update: 2023-09-09 10:07 GMT

தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் அருகே செல்வமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை காலனி சக்தி விநாயகர், செல்வமாரியம்மன், மதுரை வீரன், முனியப்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் கணபதி யாகத்துடன் துவங்கியது. நேற்று பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாலையில் யாக சாலை பூஜைகள் துவங்கியது. நான்காம் கால யாக சாலை பூஜைக்கு பின், செப். 11 காலை 09:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். செப். 12 முதல் மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமாய் விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News