கபிலா்மலை வட்டாரத்தில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்க விவசாயக் குழுவுக்கு மானியம்
விவசாயக் குழுவுக்கு மானியம்
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலா் ராதாமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில், கபிலா்மலை வட்டாரத்தில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்க விவசாய குழுவுக்கு மானியம் வழங்கப்படும். தமிழக அரசு வேளாண் துறையின் மூலம் இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராம அளவில் இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் குழுவுக்கு மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் செயல்படுத்த உள்ளது.
கபிலா்மலை வட்டாரம் இத்திட்டத்திற்கு தோ்வாகி உள்ளது. இதற்காக குழுவாக செயல்படும் விவசாயிகள் தங்கள் குழு மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிா்தம், மண்புழு உரம், அமிா்த கரைசல் மற்றும் மீன் அமிலம் போன்ற இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் அலகை நிறுவி உற்பத்தி செய்யும் பட்சத்தில் அக்குழுவுக்கு வேளாண் துறை மூலம் ரூ. 1 லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் அலகை நிறுவ ஆா்வமுள்ள விவசாயக் குழுக்கள் கபிலா்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறுமாறு கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளாா்.