கீழ்சாத்தம்பூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்.

Update: 2023-09-02 05:06 GMT

தீர்த்தக்குட ஊர்வலம்

கீழ்சாத்தம்பூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயிலில் நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். வரும் 3ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், கீழ்சாத்தம்பூர் கிராமத்தில், கொங்கு வேளாளர் சமூகத்தின் விலையன்குலத்தாருக்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் வளகத்தில், ஸ்ரீ வன்னிமர கணபதி, ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ மதுரைவீரசாமி, புற்றுக்கண் நாகராஜா கோயில்கள் மற்றும் குதிரை வாகனம், குறிஞ்சி சிலைகள், ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் பெரும் பொருட்செலவில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

இதையொட்டி கோயில் கும்பாபிஷேக விழா மொத்தம் 49 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 6 கால யாக சாலை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழா கடந்த ஆக. 28ம் தேதி திங்கள்கிழமை கிராம சாந்தியுடன் துவங்கியது. அன்று காலை 7 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 29ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 வாஸ்து பூஜை, பிரவேச பலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 30ம் தேதி புதன்கிழமை காலை 7 மணிக்கு, பஞ்ச கவ்யம், திசா ஹோமம், சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.. மாலை 6 மணிக்கு புண்யாகம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி யாகம் நடைபெற்றது.

31ம் தேதி காலை 8 மணிக்கு மிருத்யஞஜய ஹோமம், திரவ்யாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அக்னி சங்கிரஹணம், தீர்த்த சங்கிரஹணம் மற்றும் முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

இன்று செப். 1ம் தேதி காலை 7 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ப.வேலூர் காவிரி ஆற்றிற்கு சென்று. புனித நீராடி தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொணடு, யானை, குதிரை, ஒட்டகம், பசு முன்னே வர மங்கள இசையுடன், ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். காலை 8. 30 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 3ம் கால யாசாலைபூஜைகள் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் மற்றும் கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறும். நாளை செப். 2ம் தேதி காலை 8.30 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 5ம் கால யாக சாலை பூஜையும் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

வரும் செப். 3ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 5 மணிக்கு, 6ம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று, காலை 9 மணிக்கு, புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, முதலில் கோயில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிசேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு ஸ்ரீ செல்லாண்டியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிசேகம் நடைபெறும்.

பின்னர் மகா அபிஷேகம், தச தரிசனம், கோபூஜை நடைபெற்று மகா தீபாராதணை நிறைவு பெற்று பிரசாதம் வழங்கப்படும். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 3ம் தேதி வரை கோயில் வளாகத்தில் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா வேலுசாமி மற்றும் திருப்பணிக்குழுவினர், விலையன்குல குடிப்பாட்டு பங்காளிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News