ராசிபுரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

Update: 2023-07-20 06:08 GMT

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ராசிபுரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி. என். ஆனந்த் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாவட்ட தலைவர் ராசை ஜெ.ஜெ. செந்தில்நாதன், அவர்கள் தலைமையில் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு இலவச புடவை மற்றும் இனிப்புகள் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது.

தொடர்ந்து இதே போல பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழாவும் நிர்வாகிகள் சிறப்பாக நடத்தினர்.

இந்த விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நண்பன் அ,பிரபு, தமிழன்,ராஜ்குமார், ரவிக்குமார்,கணேஷ்பிரபு, பொருளாளர் விக்னேஸ்வரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் தமிழ்ச்செல்வன், இராசிபுரம் நகர இளைஞரணி தலைவர் சுதர்சனன்,நகர மாணவரணி தலைவர் சீனிவாசன்,இராசிபுரம் நகரத் தலைவர் பாக்கியராஜ், வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய தலைவர் மணிகண்டன், வெண்ணந்தூர் மேற்கு ஒன்றிய தலைவர் அருள் செயலாளர் சுப்பிரமணி, நாமக்கல் மேற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் விஜய் மணி,கிழக்கு மாவட்ட இணையதளம் ஜீவா உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News