பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம்
By : King 24x7 Desk
Update: 2025-04-01 12:04 GMT

Tn govt
கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை என்ற அரசாணை இன்னும் அமலில் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் ஜெய்ரீ முரளிதரன் நேரில் ஆஜரானார். நீதிமன்றம் உத்தரவிட்டும், பணி வழங்க மறுத்ததை எதிர்த்து விக்ரம் என்பவர் ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.