மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது! விரைவில் சந்திக்கிறேன்: விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், 3 நாட்களுக்கு முன் நடிகர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.;

Update: 2025-09-30 14:55 GMT

vijay

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், 3 நாட்களுக்கு முன் நடிகர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம்... என் வாழ்வில் இதுபோன்ற வலி மிகுந்த ஒரு சூழலை நான் அனுபவித்ததே இல்லை. மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது. வலி மட்டும்தான். இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருகின்றனர். அதற்கு காரணம் அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும் தான். அந்த அன்பும் பாசத்திற்கும் என்றும் கடமை பட்டுள்ளேன். அதனால் தான் சுற்றுப்பயணத்தில் மக்களுக்கு எந்த பாதிப்பும் மக்களுக்கு வரக்கூடாது என்பது எனது மனதில் இருந்தது. நடக்க கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே. அந்த நேரத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்ட போது அங்கிருந்து என்னால் வரமுடியும். அங்கு செல்ல எண்ணம் இருந்துச்சு. ஆனால் அங்கு போனால் வேறு எதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயத்தில் போகவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும். குடும்பத்தினரை இழந்து தவிப்போருக்கு ஆறுதல் கூறுகிறேன். கிட்டதட்ட 5 மாவட்டங்களுக்கு சென்றோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கவில்லை. கரூரில் மட்டும் அசம்பாவிதம் ஏன் நடக்கணும். மக்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும். சீக்கிரம் உண்மைகள் அனைத்தும் வெளிவரும். என் தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம். எங்களுக்கு தந்த இடத்தில் நாங்கள் பேசினோம்.எம். சார் பழி வாங்க வேண்டுமென எண்ணம் இருந்தால் நான் வீட்டியோ, அலுவலகத்திலோ இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கூடிய விரைவில் அனைவரையும் சந்திக்கிறேன். சூழலை புரிந்துகொண்டு தவெகவுக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி” என்றார்.

Similar News