- Home
- /
- ஷாட்ஸ்

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மண்டல பூஜை அடுத்த மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகிறது, அன்று இரவு நடை சாத்தப்படும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி நடைபெறும்; ஜன.20ல் நடை சாத்தப்படும். மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை பிப். 12ம் தேதி திறக்கப்பட்டு 17ம் தேதி நடை அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு 19ம் தேதி நடை சாத்தப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். துடியலூர் அருகே 3 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது சுட்டுப்பிடித்தனர். போலீசார் காலில் சுட்டதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலர் சந்திரசேகருக்கு இடது கையில் காயம்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய - தென்னாப்பிரிக்கா மகளிர் அணி மோதும் இறுதிப் போட்டி நாளை நடைபெறும் நிலையில் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. டி20 ஆடவர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது ரூ.125 கோடி பரிசுத் தொகை பிசிசிஐ வழங்கயிருந்தது.

கோண்டூர் அருகே பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. வாகனம் நேருக்கு நேர் மோதியதில், அதன் கீழே சிக்கிய பைக் 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.

சென்னையில் 197 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ போதைப் பொருட்களை காவல்துறையினர் தீயிட்டு அழித்தனர். செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட எரியூட்டியில், அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு அழிக்கப்பட்டது.

தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த சூழலில், மேலும் விலை குறையும் என நேற்று எதிர்பார்த்த நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து, மீண்டும் ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. காலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.88,800 ஆகவும், கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகல் நிலவரப்படி சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதே நிலையே தொடர்கிறது. நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300க்கும், ஒரு சவரன் ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.165க்கும் ஒரு கிலோ ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் நீக்கீ எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம். கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கம். ஓ.பி.எஸ்., டிடிவி தினகரனுடன் சேர்ந்து பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 7,717 பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 70,350 மாணவர்கள் எல்.கே.ஜி. வகுப்பிலும் 99 மாணவர்கள் முதலாம் வகுப்பிலும் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் தகவல் தெரிவித்துள்ளார்

தனக்கு எதிராக ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கைத் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில் அவதூறு கருத்துகள் கூறியதாக IPS அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக தோனி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை நீட்டிக்கும் ஒப்பந்தம் கையெழுத்து. சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்யவும், இருநாட்டு உறவுகளின் முக்கிய தூணாகவும் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்கும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து. மலேசியாவில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையேயான சந்திப்பில் ஒப்பந்தம் கையெழுத்து.

கோயில் சொத்துகள் தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த தடை நீட்டிக்கப்பட்டது. கோயிலின் சொத்துகள்[பூஜ்ஜியம் மதிப்பு] குறித்து சட்டத்திருத்தம் செய்து உயர்மட்டக் குழு அமைத்தது அரசு. அரசு பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஐகோர்ட் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தது.

எஸ்.ஐ.ஆரை பொறுத்தவரை பீகாரில் நடந்தது போன்ற சூழல் தமிழ்நாட்டுக்கு வந்து விடக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தை திமுக மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது என்றும் கோவையில் 2021 சட்டமன்ற தேர்தலை விட அதிக வாக்குகள் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.










