ஷாட்ஸ்

வெளிநாட்டினருக்கான பணி உரிமத்தை தானாக நீட்டிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது அமெரிக்க அரசு!

வெளிநாட்டினருக்கான பணி உரிமத்தை தானாக நீட்டிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது அமெரிக்க அரசு. இன்று (அக்.30) முதல் பணி அனுமதி அங்கீகார ஆவணத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இனி தானாக அனுமதி நீட்டிக்கப்படாது. அதனை புதுப்பிக்கும் முன்பு, அவர்கள் முழுமையான மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இன்று தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்!!

தங்கத்தின் விலை நேற்று காலை ஏற்பட்ட பெரும் சரிவைத் தொடர்ந்து, மாலையிலும் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாகக் குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த ஆபரணப் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று தங்கம் விலை ஒரே நாளில் ₹3,000-க்கு மேல் குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் இன்று (அக்.29) தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ரூ11,210க்கும், சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து ரூ.89, 680க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுகு ரூ.1 அதிகரித்து 166க்கு விற்பனையாகிறது. 

தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்;  கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை!!

நாமக்கல் மாவட்டம் Excel பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் உணவு சமைக்கவும், கல்லூரியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு மேலும் ரூ.1,800 குறைந்து ரூ.88,600க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு மேலும் ரூ.1,800 குறைந்து ரூ.88,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை காலை ரூ.1,200 குறைந்த நிலையில், பிற்பகல் ரூ.1,800 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.90,000-க்கு கீழ் சென்றது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,075க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 53% கூடுதலாக பெய்துள்ளது!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 53% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 151.1 மி.மீ. மழை பொழியும் நிலையில், இன்று வரை 230.6 மி.மீ. மழை பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 47% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 234.3 மி.மீ. மழை பொழியும் நிலையில், இன்று வரை 354.4மி.மீ. மழை பொழிந்துள்ளது.

காரைக்குடி மாநகராட்சியில் பல கோடி மதிப்பு ஒப்பந்த பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை!!

காரைக்குடி மாநகராட்சியில் பல கோடி மதிப்பு ஒப்பந்த பணிகளுக்கு இடைக்கால ஐகோர்ட் கிளை தடை விதித்தது. ஒப்பந்த நடவடிக்கைகளில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பணிகள் முடிந்து பல வருடங்கள் ஆகியும் நிதி தராதது குறித்து காரைக்குடி ஆணையர் பதில்தரவும் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை கவின் கொலை வழக்கில் 3-வது முறையாக ஜாமீன் கோரி எஸ்எஸ்ஐ சரவணன் மனு!!

நெல்லை கவின் கொலை வழக்கில் 3-வது முறையாக ஜாமீன் கோரி எஸ்எஸ்ஐ சரவணன் நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனேவே 2 முறை ஜாமீன் கேட்டு எஸ்எஸ்ஐ சரவணன் மனுத்தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடியானது.

புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு 250 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரிப்பு!!

புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு 250 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.65 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 556 கன அடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்குகிறது.

மதுரையிலிருந்து துபாய்க்கு 173 பேருடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்!!

மதுரையிலிருந்து துபாய்க்கு 173 பேருடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பறந்தபோது எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. எந்திரக் கோளாறால் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட எந்திரக் கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இரட்டை கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

கோவையில் 2015ல் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொய்தீன் பாஷா, ஹபீத் முகமது ஆகியோரை கொன்ற வழக்கில் 5 பேருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.சாதிக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகீர் உசேன், அசாருதீன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2015ல் இறைச்சிக் கடையில் ஈரல் எடுத்து வந்ததை தட்டிக்கேட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டனர். இறைச்சிக் கடை நடத்தி வந்த மொய்தீன் பாஷா, ஹபீத் முகமது ஆகியோரை மற்றொரு தரப்பு கத்தியால் குத்திக் கொன்றது.

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை..!!

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

திருவேற்காட்டில் இருவேறு இடங்களில் 2 பேர் கொலை..!!

திருவேற்காடு கோலடியில் போதையில் ஏற்பட்ட மோதலில் முருகன் என்பவர் மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அயனம்பாக்கத்தில் டில்லிபாபு என்பவரை, அவர் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து வெளியே அழைத்து வெட்டிக் கொலை செய்தார்.

திருக்கோவிலூர் அருகே மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி: ரூ.20லட்சம் நிதி உதவி

திருக்கோவிலூர் அருகே மின்கம்பியை மிதித்து இறந்த சகோதரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. ரூ.20 லட்சம் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான பொன்முடி வழங்கினார்.

துணை ஜனாதிபதி வருகை : கோவையில் டிரோன் பறக்க 4 நாட்கள் தடை..!

துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன் 2 நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வர உள்ளார். நாளை கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார். நாளை மறுநாள் சொந்த ஊரான திருப்பூரில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார். இந்நிலையில், கோவைக்கு நாளை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வர உள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் இன்று முதல் 30ம் தேதி வரை 4 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பூரிலும் நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்தது. சென்னையில் நாளை வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது.

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக விதிகள் வகுக்க 10 நாள் அவகாசம்: உயர்நீதிமன்றம்

 அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக விதிகள் வகுக்க 10 நாள் அவகாசம் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

2026 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: ஓ.பி.எஸ்

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவில் பங்கேற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டிஅளித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்தால் சுட்டிக்காட்டுவது நமது கடமை. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் என தெரிவித்தார்.

எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது: உதயநிதி ஸ்டாலின்

எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட சென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. மொத்தமாக 331 கி.மீ நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 3.5 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள், கோரிக்கைகள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.