இரு தரப்பினரும் மோதல் - பள்ளப்பட்டி போலீசில் விசாரணை
இரு தரப்பினரும் மோதல் - பள்ளப்பட்டி போலீசில் விசாரணை
By : King 24x7 Website
Update: 2024-01-09 08:30 GMT
சேலம் மெய்யனூரை சேர்ந்தவர் பிரேமா (வயது 48). அஸ்தம்பட்டி சுந்தர் நகரை சேர்ந்தவர் முரளி (39). இவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இரு தரப்பினரும் நேற்று முன்தினம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை முன்பு மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இரு தரப்பை சேர்ந்த முரளி, பிரேமா உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.