பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி - சென்னை தம்பதி கைது.

திருப்பூரில் பெண்ணிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்த சென்னை தம்பதி கைது

Update: 2023-12-31 12:58 GMT

திருப்பூரில் பெண்ணிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்த சென்னை தம்பதி கைது 

துணி வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி திருப்பூரில் பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த சென்னை தம்பதி கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாநகரம் அவினாசி சாலையில் உள்ள குமார் நகரில் குடும்ப த்துடன் வசித்து வருபவர் பழனியம்மாள் (60). இவருக்கு தேன்மொழி என்ற மகள் உள்ளார். இந்நி லையில்  பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் சென்னை தி.நகரை சேர்ந்த சுரேஷ் (49) என்பவரும், அவரது  மனைவி சென் பியூலா என்பவரும் பழனியம்மாள் வீட்டிற்கு சென்று, நாங்கள் துணி கடை நடத்தி வருகி றோம் இந்த தொழிலில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதற்கு பழனி யம்மாள், முதலில் தயங்கி யதாக தெரிகிறது. பின்னர் தனது மகள் தேன்மொழி யுடன் கலந்து ஆலோசித்து   பண முதலீடு செய்ய ஒப்புக்ெகாண்டனர்.  அதன்படி    மாதந்தோறும்  பண முதலீடு செய்தனர். முதலில் சிறிய லாபம் கிடைத்ததாக தெரிகிறது. பின்னர் லாபம் அதிகம் கிடைக்கும் என்ற ஆசையில் பழனியம்மாள் அதிக பணம் கட்டி உள்ளார். இப்படியாக தொடர்ந்து கடந்த 8 மாதமாக பழனியம்மாளும், மகள் தேன்மொழியும் சேர்ந்து ரூ.30 லட்சம் வரை பணம் கட்டியதாக  கூறப்படுகிறது. இதற்கிடையில் சுரேஷ், அவரது மனைவி சென் பியூலா  திடீரென தலை மறைவாகி விட்டனர். உடனே பழனியம்மாள் , தம்பதி குடியிருந்த வீடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் என அனைத்து இடங்களிலும்   தேடினார். ஆனால் அவர்கள்  குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள், சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சுரேஷ், அவரது மனைவி    சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சென்னை விரைந்தனர். அங்கு அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பூ ருக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜ ர்ப்படுத்தி  சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News