கூடலூர் அருகே விவசாய நிலங்களில் காட்டு யானை அட்டகாசம்.

Update: 2023-11-17 11:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட மண்டைக்கரை பகுதியில் வசித்து வருபவர் குமாரன். இவர் முதுமலை புலிகள் காப்பக மாற்றிடம் திட்டத்தில் வெளியேற்றப்பட்டு நெல்லியம்பகுதியில் குடி அமர்த்தப்பட்டார். இவரது மூன்று ஏக்கர் தோட்டத்தில் பயிரிடப்பட்ட வாழை, பாக்கு, தென்னை மரத்தை இன்று காட்டு யானை மிதித்து நாசம் செய்துள்ளது. இது சம்பந்தமாக வனத்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பெயரில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News