வத்திராயிருப்பு அருகே வாலிபர் குத்தி கொலை

வத்திராயிருப்பு அருகே வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-11-25 10:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராமசாமியாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் இஞ்சி (எ) இருளப்பன் மகன் ராஜா (36).இவர் செங்கல் சூளையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். ராஜா வழக்கம்போல் ஆத்தங்கரைபட்டியில் உள்ள செங்கல் சூளையில் இன்று காலை பணிக்கு சென்ற பொழுது அதே ராமசாமிபுரம் தெருவை சேர்ந்த பெரிய கருப்பன் மகன் குமார் (31 ) என்பவர் ராஜாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் குமார் சரணடைந்துள்ளார் .

உடலை மீட்ட கூமாபட்டி காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கூமாப்பட்டி காவல்துறையினர் வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News