கூலித் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை!
By : King 24X7 News (B)
Update: 2024-01-08 12:07 GMT
தற்கொலை செய்து கொண்டவர்
திண்டுக்கல் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நல்லாகுளம் தெருவைச் சேர்ந்தவர் சித்திக் (38).கூலித் தொழிலாளி.
இவர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இவர் அடிக்கடி மது அருந்துவதால் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு மாட்டி இறந்து போனார்.
இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவருக்கு தவ்லத் பானு என்ற மனைவி, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.