வட்டார காங்கிரஸ் குழு கூட்டம்

சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-02-16 02:16 GMT

காங்கிரஸ் குழு கூட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தெற்கு வட்டார காங்கிரஸ் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் சஞ்சய்காந்தி தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் வீரமணி முன்னிலை வகித்தாா். இதில் வாக்குச்சாவடி முகவா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, வருகிற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும், காா்த்தி சிதம்பரம் எம்.பி.க்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இளைஞா் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் காா்த்தீஸ், முன்னாள் மாவட்டத் தலைவா் காா்த்தி, வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவா் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News