சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

குற்றச் செய்திகள்

Update: 2024-03-06 10:00 GMT

சூதாட்டம் 

ஆரியூரில் பொது இடத்தில் சூதாட்டம் விளையாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் ஆரியூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த ஆரியூர் பகுதியை சேர்ந்த செல்லத்துரை, மாரிமுத்து தங்கவேல், சுந்தரராஜ், முருகன் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சூதாட்ட அட்டைகள், ரொக்க பணம் ரூ. 110 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News