முன்விரோதம் காரணமாக தர்மலிங்கம் என்பவரை தாக்கிய ஆறு பேர் மீது மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

முன்விரோதம் காரணமாக தர்மலிங்கம் என்பவரை தாக்கிய ஆறு பேர் மீது மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

Update: 2024-03-08 07:11 GMT
முன்விரோதம் காரணமாக தாக்குதல் 

விருதுநகர் கிழக்கு பாண்டியன் சார்ந்தவர் தர்மலிங்கம். இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த முத்துக்குமார்க்கும் இடையே பொதுப்பாதை பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருந்த முன்விரோதம் காரணமாக முத்துக்குமார், தாமு, மதன், கருப்பு, அஜய், தர்மர் ஆகிய ஆறு நபரும் சேர்ந்து தர்மலிங்கத்தை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதில் காயமடைந்த தர்மலிங்கம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் தர்மலிங்கம் அளித்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News