தட்டாங்காட்டில் மது போதைக்கு அடிமையான வாலிபர் தற்கொலை

தட்டாங்காட்டில் மது போதைக்கு அடிமையான வாலிபர் மனவிரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-14 09:16 GMT

காவல் நிலையம்

 கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, ஹை ஸ்கூல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் மகன் அலாவுதீன் வயது 38. இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். மேலும், சம்பாதிக்கும் பணம் அனைத்தையும், மது போதைக்கு செலவு செய்து வந்தார்.

இதனால் விரக்தி அடைந்த அலாவுதீன் மார்ச் 13ஆம் தேதி அருகில் தட்டங்காடு பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு, மாலை 4-20- மணி அளவில் தாயார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அலாவுதீன். இந்த சம்பவம் அறிந்த அலாவுதீனின் தாயார் சுமையா தகிரஹ் இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர்,

உயிரிழந்த அலாவுதீன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம் பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News