டூவீலர் மீது தனியார் பஸ் மோதியதில் சாயப்பட்டறை கூலித் தொழிலாளி பலி

டூவீலர் மீது தனியார் பஸ் மோதியதில் சாயப்பட்டறை கூலித் தொழிலாளி பலி

Update: 2024-07-18 03:30 GMT
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது தனியார் பஸ் மோதியதில் சாயப்பட்டறை கூலித் தொழிலாளி பலியானார். குமாரபாளையம் வளையக்காரனூர் பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார், 24. சாயப்பட்டறை கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை 07:45 மணியளவில் மளிகைக்கடைக்கு செல்வதற்காக, தனது ஸ்பெலேண்டர் பிளஸ் டூவீலரில், பல்லக்காபாளையம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் வழியில் இறந்து விட்டார் என தெரிவித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமாக தனியார் பஸ் ஓட்டுனர் ஆத்தூர், கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த கோபி, 28, என்பவரை கைது செய்தனர்.

Similar News