விளையாட்டு மைதானம் அமைக்க அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் மனு

குமாரபாளையத்தில் விளையாட்டு மைதானம் அமைக்ககோரி விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2024-07-19 11:11 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குமாரபாளையம் பகுதியில் உள்ள இளைஞர்கள் பல வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு சென்று பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று வருகின்றனர். இவர்கள் விளையாட்டு பயிற்சி பெற வேண்டுமானால் சேலம் அல்லது ஈரோடுதான் செல்ல வேண்டியுள்ளது. இவர்களுக்கு குமாரபாளையம் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தால், அவர்கள் பயிற்சி பெறவும், பல்வேறு போட்டிகளில் வென்று, நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் உதவியாக இருக்கும். ஆகவே, குமாரபாளையம் பகுதியில் விளையாட்டு மைதானம், போதிய பயிற்சியாளர்கள் அமைத்து தர வேண்டுகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News