கர்சீப் நிறுவனத்தில் பணம்திருடிய நபர் கைது

குமாரபாளையம் அருகே கர்சீப் நிறுவனத்தில் லாக்கரை உடைத்து பணம் ஒரு லட்சம், சொத்து ஆவணங்கள் திருடப்பட்டன.

Update: 2024-07-19 11:16 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சிவசக்தி நகர் பகுதியில் கர்சீப் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் சதீஸ்ராஜ், (41). ஜூலை 11ல் இரவு 07:00 மணியளவில், இவர் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை தன் அலுவலக லாக்கரில் வைத்து சென்றார். மறுநாள் காலை 09:00 மணியளவில் இவரது அலுவலக மேலாளர் தனசேகரன் இவருக்கு போன் செய்து, அலுவலக பின்புற தகர சீட் உடைக்கப்பட்டு, லாக்கர் கீழே வீசப்பட்டு கிடக்கிறது என்று சொன்னார். நேரில் சென்று பார்த்த போது, லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த பணம் ஒரு லட்சம் மற்றும் சொத்து ஆவணங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் சி.சி.டி.வி. கேமராவினை ஆய்வு செய்த போது, கள்ளகுறிச்சியை சேர்ந்த ரவி, 51, என்பது தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News