திம்பம் மலைப்பாதையில் காய்கறி வேண் கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதையில் காய்கறி வேண் கவிழ்ந்து விபத்து

Update: 2024-07-20 06:38 GMT
திம்பம் மலைப்பாதையில் காய்கறி வேண் கவிழ்ந்து விபத்து கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை மாவட்டம் காரமடைக்கு காய்கறி, தக்காளி பாரம் ஏற்றிய சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த சரக்கு வேன் இரவு திம்பம் மலைப்பாதையின் 1-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த தக்காளி மற்றும் காய்கறிகள் ரோட்டில் சிதறியது. விபத்து குறித்து சத்தி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News