ராமநாதபுரம் மாணவர் தலைவர்கள் பதவி ஏற்கும் விழா நடைபெற்றது

ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது

Update: 2024-07-24 10:30 GMT
ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் CBSE மேல் நிலைப் பள்ளியில் ஸ்தான ஆரோகனம் உற்சவம் எனப்படும் பள்ளி மாணவர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் , மாணவ குழுத்தலைவர்கள் , விளையாட்டு மற்றும் கலாச்சார குழுத்தலைவர்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவானது பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா தலைமையின் கீழ் நடைபெற்றது. உத்திரகோச மங்கை அரசு உயர் நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் M.சுரேஷ் அவர்கள் மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து தலைமைப் பொறுப்பின் பண்பையும் அதன் முக்கியத்துவத்தையும் சமுதாயத்திற்கு மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமையையும் பற்றி விளக்கி சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வினை அமிர்த வித்யாலயம் பள்ளி வருடந்தோறும் சிறப்பாக நடத்துவதாக பாராட்டி பேசினார். ராமநாதபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளியின் முதல்வர் R. கோகிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் M. இந்திரா தேவி வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர்கள் . ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அமிர்த வித்யாலயம் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News