நம்பிக்கை மைய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகிற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள நம்பிக்கை மைய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

Update: 2024-07-25 15:53 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகிற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள நம்பிக்கை மைய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இவ்வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விருப்பம் உள்ள நபர்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படும். புதிய எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டால் அவர்களையும் தொடர் கண்காணிப்பு செய்து பராமரிக்கவும் இவ்வாகனம் பயன்படும்.

Similar News