அப்துல்காம் நினைவு தினம்: மரக்கன்றுகள் நடல்

சங்ககிரி:அப்துல்காம் நினைவு தினம்: பசுமை அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடல்...

Update: 2024-07-27 15:59 GMT
சேலம் மாவட்டம், பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவுதினத்தினையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சங்ககிரியில் நடைபெற்றது. பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கதத்தின் துணைத்தலைவர் சின்னதம்பி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் பச்சியண்ணன் பசுமை சங்ககிரி அமைப்பின் நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News