சிவன் ஆலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்...
சங்ககிரி: சிவன் ஆலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமர் சோழீஸ்வரர் கோயில், சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமர் பூத்தாழீஸ்வரர் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அருள்மிகு பெரியநாயகியம்மன் உடனமர் சோழீஸ்வரர் சுவாமிகள், நந்தி பகவானுக்கும், சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இதே போல் பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமர் பூத்தாழீஸ்வரர் சுவாமிகளுக்கும், உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கும், நந்தி பகவானுக்கும் பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இரு கோயில்களில் நடைபெற்ற பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்