புதுக்கோட்டை நகர்பகுதியில் கீழ 3ம் வீதியில் தெரு நாய் தொல்லை மிக அதிகமாக உள்ளது. காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள், முதியோர்கள், உடல் ஊனமுற்றோர்கள் இந்த நாய் தொல்லையால் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதனால் ஒருவித அச்சத்துடையே பொதுமக்கள் செல்கின்றனர்.