அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் சாலை மறியல் போராட்டம்

பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து சாலை மறியல் போராட்டம்

Update: 2024-08-08 06:21 GMT
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அண்ணாமலைச்சேரி கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 259-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 18 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில் வெறும் ஒரே ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில் அவரும் ஒரு வார காலமாக பள்ளிக்கு வரவில்லை. மேலும் தலைமை ஆசிரியர் முதற்கொண்டு மீதமர்ந்த ஆசிரியர்களும் பணி மாறுதல் பெற்ற காரணத்தினால் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் கல்வி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவியரும் அண்ணாமலைச்சேரி கிராம பொதுமக்களும் இணைந்து தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News