நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய நாமக்கல் MP

நாமக்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் (தெற்கு)படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் V.S.மாதேஸ்வரன் MP கல்வி உதவித் தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2024-09-20 08:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (தெற்கு) பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மாணவர் இளவரசன் தற்போது, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்.இதனிடையே அந்த மாணவனை பாராட்டி, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S. மாதேஸ்வரன் MP., மாணவரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று மாணவர் பயின்ற அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சீனிவாச ராகவன், ஆசிரிய ஆசிரியைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் துரை,ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன்,பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News