வாலிபர் வெட்டிக் கொலை : 3பேர் கும்பல் வெறிச்செயல்!

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் வாலிபரை 3பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Update: 2024-09-20 09:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி அருகே மறவன்மடம், மேற்கு தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் முருகன் (23). பாத்திர வியாபாரியான இவர் தற்போது புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரில் குடியிருந்து வருகிறார். இன்று காலை 7 மணி அளவில் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த 3 பேர், அவரை சுற்றி  வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முருகனுக்கும் தூத்துக்குடி ராஜகோபால் நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மரிய தங்கம் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் இதில் சிப்காட் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனால் முருகனை மரியதங்கம் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மரிய தங்கம் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். புதுக்கோட்டை பஜாரில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News